சுருக்கமான செய்தி :
பதுளை மாவட்ட செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக (நிருவாகம்) W.M. சமிந்த வீரசிங்ஹ அவர்கள் இன்று (01) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் ஹாலிஎல பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர், 2009 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டுள்ளார். திரு வீரசிங்ஹ அவர்கள் வெளிமடை உதவி பிரதேச செயலாளராகவும், பதுளை உதவி மாவட்ட செயலாளராகவும், வெளிமடை பிரதேச செயலாளராகவும் திறமையான அதிகாரியாக சேவை செய்துள்ளார். மாவட்ட செயலகம் – பதுளை.

×





